பள்ளரே பாண்டிய மரபினர்


பள்ளரே பாண்டிய மரபினர்
பேராசிரியர். சு. சண்முக சுந்தரம் (மறவர்)

        இவர் 'ஐந்து கதைப் பாடல்' என்ற நூலில் கள்ளரும், மறவரும் 'பாண்டியர் மரபினர்' அல்லர் என்றும், இவர்கள் பாண்டிய அரசிற்கு பகை ஆற்றலாகவே விளங்கி வந்தனர் என்றும், 'பள்ளர்களே பாண்டியருக்கு துணையாய் இருந்து வந்தனர்' என்றும் கண்டுள்ளார். அந்த கதைப் பாடல்களில் சில பாடலடிகளை இங்கே காண்போம்:


"கள்ளநாட்டார் ஒன்று கூடி 
களவு செய்ய புறப்பட்டார்கள்"
...........................................
"தென்னாடு போகணுமே
தீவட்டிக் கொல்லைப் போடணுமே
கன்னக்கோல் ஆக்கணுமே
கையருவாள் வல்லயமும்
குத்துகம்பு வல்லையமும்
கொடுக்கருவாள் சமுதாடும்
பூட்டை மெல்ல முறிக்கணுமே
போய் களவு செய்யணுமே
கன்னமது போட வேண்டும்
களவு செய்து திரும்ப வேண்டும்
பதிமூன்று பேர் கள்ள நாட்டார்
பக்குவமாய் புறப்பட்டார்கள்"
.............................................
"களவுக்குத் தலைவன் அண்ணே
கருப்புசாமி வந்தேன் அண்ணே
காஞ்சிபுரம் கருப்பநென்றால்
கடவுளுக்கும் அஞ்சமாட்டான்"
..........................................
"களவு செய்ய இடமுமில்லை
கன்னம் போட வழியுமில்லை
இரும்பு ஊசி களவு போனால்
ஏற்ற தங்க ஊசி வாங்கிடுவேன்
ஆனால் ஒரு துப்பதுதான்
அருமையுடன் சொல்லக்கேளும்
கோபாலசமுத்திரத்தில்
குடியிருக்கார் குடும்பக்கமார்
நாகநல்ல குடும்பனென்றும்
கனக நல்ல குடும்பனென்றும்
பள்ளருட தாவளத்தில்
பணம் அதிகம் இருக்குதய்யா
ஏழுகிடாரத் திராவியந்தான்
இருக்குதய்யா அங்கேதான்
ஆயக்காலில் தொங்குதய்யா"
................................................
"கண்டார்கள் கட்டிடத்தை
கல்லறைத்தான் துளைக்கும்
கன்னக்கோலை எடுத்தார்கள்
செங்கல்லைத் துளைக்கும்
சிறு ஆக்கரவைத்தான் எடுத்தார்
அத்தசாம நேரத்தில்
ஆளரவம் இல்லா வேளையிலே
கன்னமது போடலுற்றார்
கதவுகளைத்தான் திறந்தார்
கீழ்த்தாளை மேல்த்தாளை
கிருபையுடன் துறக்கலுற்றார் 
வெண்கலக் கதவுதன்னை
வேகமுடன் திறக்கலுற்றார் 
தங்க நல்ல களஞ்சியத்தைத்
தான் பார்த்தார் கள்ளநாட்டார்" 
....................................................
"கள்ளருக்குத் தலைவன் தானே
கருப்பசாமி தேவராவார் -- 
'கலங்காதிங்கோ மயங்காதிங்கோ
காவலுக்கு ஒருவரில்லை' என
ஏழு கிடாரத் திரவியத்தை
ஏகமுடன் வாரலுற்றார் 
வயிரங்களும் முத்துக்களும்
வாரி வாரி கட்டலுற்றார்'
..............................................
"குலவைச் சத்தம் காதில் கேட்டார்
குழந்த மெச்சும் பெருமாள் பாண்டியனும்
வண்ணாத்தி வீடு விட்டு
வாராரே பாண்டியரும்
காச்சிநாயும் பூச்சிநாயும்
கடுமையுட வருதய்யா
கள்ளருட குலவை சத்தம்
காச்சி நாயும் கேட்டிடுமாம்
வீமானென்ற நாயுதுதான்
துள்ளி ஓடி வருதய்யா
நாயுடனே பின் தொடர்ந்தார்
நலமான பாண்டியரும்"
...................................................
"தொட்டிபாலம் தான் கடந்து
துளசிமாடம் தான் கடந்து
தாம்பிற வன்னிதான் கடந்து
தானே பாளையங்காலும் கடந்து
நாகக் குடும்பனுட வளவதிலே
நலமான பாண்டியரும்
பள்ளர்களை எழுப்பியல்லோ
பாண்டியரும் ஏது சொல்வார்
கனகக் குடும்பா நீ கேளு
களஞ்சியங்கள் எங்கே போச்சி
நாகக் குடும்பா எனது
நாட்டாண்மை எங்கே போச்சி
ஏழுகிடாரத் திரவியந்தான்
இருக்குதோ பாருமென்றார்
பூமியிலே போட்டிருந்தால்
பூதங்க்கொண்டு போகுமென்று 
ஆயக்கால் போட்டு வைத்தாய்
அருமையான திரவியத்தை
வடநாட்டு கள்ளர் வந்து
வாரிக் கொண்டு போய்விட்டார்
கருங்காட்டு ஊரதிலே
கண்டேனே கள்ளர்களை
ஓடவிட்டு தலையறுத்தேன்
உங்கள் திரவியத்தை நான் காத்தேன்"

                கள்ளரும்,மறவரும் பாண்டிய நாட்டின் பகைக் கூட்டத்தினர் என்பதுவும், குடும்பர் குலப்பட்டம் கொண்ட பள்ளர்களே பாண்டியர்களின் உறவினரும், மரபினரும் ஆவர் என்பதுவும் மேற்கண்ட கதைப்பாடல் ஆய்வுகள் கண்டு காட்டும் உண்மையாகும்.

               தஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினரில் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழி வந்தவர்கள் என்றும் அண்மைக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ, அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment